Friday, October 16, 2009

ஆதவன் (2009)






தீபாவளி தினம் பிறக்கும்போது தியேட்டருக்குள்தான் கோலா குடித்துக்கொண்டிருந்தேன்.. லிபேட்டியில் ஆதவன் போட்டார்கள்.. பாடசாலை நண்பர்களுடன் சென்றதால் கும்மாளத்துக்கும் கூத்துக்கும் குறைவில்லை.. படம் முதல்பாதி குய்யோ முறையோ என்று சிரிக்க வைத்விட்டார்கள்.. வடிவேலு வடிவேலுதான்... இரண்டாம்பாதி மெதுமெதுவாக சொதப்ப ஆரம்பித்து கடைசியில் உச்ச கட்ட சொதப்பல்.. ஏதோ முற்பாதியில் இருந்த திருப்பதியால் ரவிக்குமாரை திட்டாமல் வந்தோம்.. நயன்தாரா கிழண்டிவிட்டது.. பிரபுதேவாவை செட் பண்ணிக்கொண்டு வீட்ட போக வேண்டியதுதான்.. நாகேசின் மகன் சும்மா வந்து போகுது பாவம்... சூர்யா சும்மா ஏதோ செய்கிறார்.. ரவியும் உதயநிதியும் வரும் இடம் இழுவை... உதயநிதிதான் அந்த பறக்கிற சீன் வைத்திருப்பார் என்று நினைக்கிறன்.. குருவியை எல்லாரும் சுட்டு விழுத்தியும் பயபுள்ள இன்னும் திருந்தலை பாரேன்? கடைசியில அந்த ரொக்கெட் லோஞ்சரை கையால எடுத்து குத்துறத கண்டால் அமெரிக்காக்காரன் பட்டையும் கொட்டையும் பொட்டுக்கொண்டு இன்னொரு நோபல் பரிசுக்கு அப்ளை பண்ணுவான்.

மற்றும் படி படம் சும்மா பாக்கலாம்.. காமெடிப்பீசு..

தமிழ் மசாலாப்படங்கள் வரிசையில் 45/ 100

2 comments:

Aadhavan October 16, 2009 9:22 PM  

The same kind of Review also available in:
http://www.supershowbiz.com/2009/10/aadhavan-review-new-tamil-movie-first.html

கனககோபி October 17, 2009 12:16 AM  

//பிரபுதேவாவை செட் பண்ணிக்கொண்டு வீட்ட போக வேண்டியதுதான்..//

பிரபுதேவான்ர மனுசி உங்களத் தேடுறாவாம்... (போட்டுத் தளள்ளத் தான்...)